இன்றைய தினமணி நாளிதழில் ஜோதிட கேள்வி பதில் பகுதியில் கேக்கப்பட்ட கேள்விகளில் 90 விழுக்காடு தங்களின் மகன் ,மகள் திருமணம் தடைபெற்று தாமதமாவதாகவும் அதற்க்காக பல கோவில்களில் பரிகாரம் செய்துள்ளதாகவும் இன்னும் ஏதும் பரிகாரம் உள்ளனவா என்றும் கேட்ட்கட்டிருக்கிறது .
:முழுமையான கடவுள் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரங்களே தேவை இல்லை யாருடன் எப்படி .எப்போது மணசெய்விப்பது என்று அந்த கடவுளுக்கு தெரியாதா என்ன ?
முதல் பரிகாரம் ஒரு கோவிலில் செய்துள்ளீர்களே அதிலாவது பூரண நம்பிக்கை வைத்தீர்கள என்றால் அதுவும் இல்லை .அதில் நம்பிக்கை குறை இருந்ததாலே மேலும் மேலும் கோவில் கோவிலா அலைகிறீர்கள்
வேண்டுதலுக்கு மட்டும் அருளும் கடவுள் கடவுளே அல்ல !
அழுதபிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்றால் அது தாயின் குறைபாடு
சமயம் அறிந்து பாலூட்டுபவளே ஒரு நல்ல தாய் ,
கடவுளும் நல்ல தாயே !