Pages

Powered By Blogger

Wednesday, October 1, 2014

சட்டமும் சமுதாயமும்

நியாயமான தீர்ப்புதானே, இதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம், அழுகை?' என்று என்னிடம் நண்பர் கேட்டார்.

"உங்க வீட்ல யாரும் ஜெயிலுக்குப் போனதில்லை போலும்" என்றேன். அவர் கோபித்துக்கொண்டு நடையைக் கட்டினார்.

அவரது அறியாமையைக் கண்டு வியப்பதைத் தவிர ஏதும் செய்ய இயலவில்லை. அவர் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டவர். அவரிடம் விளக்குவதிலும் அர்த்தமில்லை.

ஒரு தீர்ப்புக்குப் பிறகு ஏற்படும் அழுகை, புலம்பல், ஆர்ப்பாட்டம் ஆகியவை நியாயத்துக்கும் நீதிக்கும் எதிர்வினை அல்ல.

ஒரு குடும்பத்தில் ஒருவர் சிறை செல்லும்போது அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அழுகிறார்கள். மிகப்பெரும் துக்கம் கவிகிறது.

குடும்ப அங்கத்தினர் சிலர் நீதிமன்றத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, மற்றவர்கள் சிறை வாசலில் கிடக்கிறார்கள். சிலர் வீட்டுக்கு வந்த பின்னும் துயரம் தாங்காமல் வாடுகிறார்கள்.

சிறை சென்ற நபர் அடிதடியில் ஈடுபட்டிருக்கலாம். கொலை, திருட்டாக இருக்கலாம். எத்தகையக் குற்றமாக இருந்தாலும், அந்தக் குடும்பம் அந்த நபருக்காக கண்ணீர் சிந்தவும், தண்டனையிலிருந்து அவரை மீட்கவுமே முயலும். நீதிமன்றம் தண்டித்ததற்காக குடும்பமும் அவரை தண்டிப்பதில்லை.

இதேதான் ஒரு கட்சித் தலைவி அல்லது தலைவர் ஒரு குற்றத்துக்காக தண்டனை பெற்றுச் சிறை செல்லும்போதும் ஏற்படுகிறது. தனிநபருக்கு ஒரு குடும்ப அளவில் என்றால் ஒரு தலைவிக்கு மாநில அளவில் நடக்கிறது.

சட்டத்தின் முன் எல்லாரும் சமமாக இருக்கலாம். ஆனால், சமூகத்தில் அனைவரும் சமம் அல்லர். சமூகம் ஒவ்வொருவருக்கும் ஒரு மதிப்பீட்டைத் தருகிறது. அதில் தலைமைக்கு முதல் இடம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவும் மற்ற இருவரும் மட்டும் தண்டிக்கப்பட்டு, ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருந்தால், சசிகலாவுக்காக தமிழ்நாடு கண்ணீர் வடித்திருக்காது. நிச்சயமாக எந்தக் கலவரமும் நடந்திருக்காது.

ஆனால், இந்தத் தீர்ப்பு ஜெயலலிதா மீதானது என்பதால்தான் தமிழ்நாட்டில் இத்தகைய எதிர்வினைகள்! ஏனென்றால், அவரை நேசிக்கவும், அவருக்கு துன்பம் நேர்ந்தால் அழவும் ஒரு கூட்டம் இருக்கிறது.

இது காலங்காலமாக இருந்துவரும் மனநிலை. போர்க்களத்தில் மன்னர் சிறைப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் அரண்மனையில் பல பேர் தற்கொலை செய்துகொள்வார்கள்.

அவர்களால் அந்த சோகத்தை - வெற்றிடத்தை - ஏற்றுக்கொள்ள இயலாது. தற்போது தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருப்பதும் இதே உளவியல்தான்.

எல்லாமும் எல்லாருக்கும் தெரியும். தலைவர்களின் குறை, நிறைகளோடுதான் மக்கள் ஏற்கிறார்கள். தேர்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்கிறார்கள். சமூகம் ஒருபோதும் அப்பாவித்தனமாக வாக்குகளை அளிப்பதேயில்லை.

ஒரு தலைவன் என்பவன் சமூகத்தின் உருவாக்கம். ஒரு சமூகம் எந்தெந்தக் குறைகளை பெரிதாகக் கருதவில்லையோ அந்தக் குறைகளை அந்த சமூகம் அதன் தலைவனிடமும் காணாது; பெரிதுபடுத்தாது.

இதே உளவியலைத்தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கிலும் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

இந்த வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு அவருடைய தொண்டர்கள் அழுவதும், ஆர்ப்பாட்டம் செய்வதும் உண்ணாநிலை காண்பதும், சிறைசென்ற ஒருவரது குடும்ப அங்கத்தினரின் மனநிலைக்கு ஒப்பானது.

நாளை 2ஜி வழக்கில் ஆ. ராசா, கனிமொழி சிறை சென்றால் இதே சமூக வெளிப்பாடு தமிழ் மக்களிடம் ஏற்படாது. தொலைபேசி இணைப்புகளை முறை

கேடாக வீட்டுக்குள் வைத்திருந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் கைது செய்யப்பட்டாலும் தமிழர்களுக்கு அது வெறும் செய்தி மட்டுமே.

ஆனால், கருணாநிதி கைது செய்யப்பட்டால் நிச்சயமாக தமிழ்நாட்டில் தற்போது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள எதிர்வினைகளுக்கு இணையான அழுகையும் ஆர்ப்பாட்டமும் உறுதியாக நிகழும்.

ஏனெனில், சட்டத்தின் முன்பாக ஜெயலலிதாவும் கருணாநிதியும், சாமானியனும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், சமூகத்தின் முன் அவர்கள் மதிப்பு வேறானவை.

சில நேரங்களில் சட்டம் தரும் சலுகையை சமுதாயம் கொடுப்பதில்லை. சில நேரங்களில், சமூகம் தரும் சலுகையைச் சட்டம் ஏற்பதில்லை.

By இரா. சோமசுந்தரம்
First Published : 02 October 2014 01:42 AM IST
தினமணியில்

Tuesday, September 30, 2014

குற்றமும் தண்டனையும் By சிற்பி பாலசுப்பிரமணியம்


First Published : 01 October 2014 01:41 AM IST

அண்மைக் காலமாக இந்திய நீதிமன்றங்கள் தன்னெழுச்சி பெற்றுக் குற்ற விசாரணைகளில் ஈடுபட்டுத் தண்டனைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக 2ஜி விசாரணை, நிலக்கரி ஊழல் விசாரணை ஆகியவை மக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ள சூழலில் நீண்டகாலம் தமிழகத்திலும், பின்னர் கர்நாடகத்திலுமாக நடைபெற்ற தமிழக (முன்னாள்) முதல்வரின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. உடனடியாகத் தண்டனையின் நிறைவேற்றம் சிறையில் அடைக்கப்படும் நிகழ்வாகத் தொடர்ந்திருப்பது பல்வேறு சிந்தனை அலைகளை எழுப்பியுள்ளது.

அரசியல் தலைவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் நீதியின் வெற்றியாக இத் தீர்ப்பைக் குறித்து அவசரம் அவசரமாக அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள். நாளிதழ்களும் சட்டத்தின் ஆட்சியென்றும், ஊழல்களுக்கு எதிரான தீர்ப்பு என்றும் கருத்துரைகளை வெளியிட்டிருக்கின்றன. தினமணி மட்டும் தான் நடுவுநிலை பிறழாத, பக்கச் சார்பு இல்லாத, பெருவாரியான மக்களின் அதிர்ச்சி அலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பொது நோக்கோடு அருமையான தலையங்கத்தை அளித்திருக்கின்றது.

கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பு நடுநிலையாளர்களையும், சிந்தனையாளர்களையும் மிகுந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது என்பது தெளிவு. பாதிக்கப்பட்ட கட்சித் தொண்டர்களின் உணர்ச்சி வசப்பட்ட வெளிப்பாடுகள் இயற்கையானதென்றாலும் அதற்கு அப்பால் நின்று குற்றத்தின் தன்மையையும், தண்டனையின் அளவு, அதனை அளித்திருக்கும் முறையை ஆகியவற்றையும் சீர்தூக்கிச் சிந்திப்பது நாகரிகச் சமுதாயத்தின் இன்றியமையாக் கடமைகளில் ஒன்று எனக் கருதலாம்.

முதன்முதலாக உலகில் சட்டங்களை உருவாக்கியவன் என்று பாபிலோனிய (இன்றைய இராக்) அரசன் ஹம்முரபி என்பவனை வரலாறு சுட்டிக் காட்டும். அவனுடைய ஆட்சிக் காலம் கி.மு. 18ஆம் நூற்றாண்டு என்பார்கள். அவன்தான் சட்டங்களை உருவாக்கிய மூலவன் என அறியப்படுபவன். 282 சட்ட விதிகளைச் சமைத்து சமைத்து அவற்றைப் பல கருங்கற் பலகைகளில் பதித்து அறிவித்தான் அவன். அப்பலகைகளில் ஒன்று சுட்டுவிரல் போல் வடிவமைக்கப்பட்டு உச்சியில் அவனுடைய உருவத்தையும் கொண்டிருக்கிறது. பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இந்த ஒரு கல் மட்டும் இன்றும் காணக் கிடைக்கிறது. கல்லில் வெட்டியது போலவே அக்கேடியா மொழியில் களிமண் பலகைகளில் இச்சட்டங்கள் கைவினைப்பாட்டோடு அமைக்கப்பட்டிருந்தன.

ஹம்முரபியின் ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சட்டங்களில் "கண்ணுக்குக் கண், கைக்குக் கை, உயிருக்கு உயிர்' என்ற தண்டனை முறை எடுத்தரைக்கப்பட்டுள்ளது. ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குத்தினால் அவன் கண்ணைக் குத்துவது தண்டனை. இப்படியே கைக்குக் கை, உயிருக்கு உயிர் என்ற தண்டனை முறையை இந்த ஆதிகாலச் சட்டம் வகுத்துரைக்கிறது.

இதற்கு முன்பும் ஊர் என்ற பாபிலோனியாவின் நகரில் நம்ம ஊர் என்ற சட்டமுறை இருந்தது என்று சொல்லப்படுகிறது. ஹம்முரபிக்குப் பின்னர் உலக சமுதாயத்துக்கு முழுமையாகக் கிடைத்த சட்டங்களைத் தான் மனு ஸ்மிருதி என்கிறோம். கி.மு. 1000 என்று வரலாற்றாசிரியர் கருதும் இச் சட்ட நூலில் சமுதாயத்தின் அடித்தட்டு வர்க்கத்தைப் புழுவும் பூச்சியும் போல் கருதுகிற சட்டங்களும் தண்டனைகளும் அமைந்தன. வருண வேறுபாடுகளுக்கேற்ப நியாயங்களும் வகுக்கப்பட்டதை அந்நூல் தெளிவுபடுத்துகின்றது.

தமிழர்களுக்குத் திருக்குறள் தோன்றுமுன் வாழ்வியல் வகுத்த சட்ட நூல்கள் இருந்ததை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், செவி வழியாக வழங்கி வருகிற சில தொன்மங்களைத் தமிழிலக்கியங்கள் முன் வைக்கின்றன. மனுநீதிச் சோழன், சிபிச் சக்கரவர்த்தி, பொற்கைப் பாண்டியன் கதைகள் நமக்குச் சொல்லுகிற செய்திகளில் உயிர்க் கருணை ஊடு சரடாக ஓடுகிறதென்றாலும், உயிருக்கு உயிர், தசைக்குத் தசை, கைக்குக் கை என்ற கருத்தின் கூறுகள் அன்று மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்ட நீதிமுறையாக இருந்தன என்பதையே இக்கதைகள் புலப்படுத்திக் காட்டுகின்றன.

அண்மைக் காலக் கதைகளில்கூடத் திருட்டுக் குற்றங்களுக்கு மாறு கால் மாறு கை வாங்குகிற கடுமையான தண்டனை முறைகள் இருந்ததை அறிய முடிகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் பின்னரும் குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. மரண தண்டனை ஏற்கப்பட்டிருந்தாலும் மனிதநேயம் மிக்கவர்கள் அத் தண்டனையை அகற்ற வேண்டுமென வலிமையோடு குரல் கொடுத்து வருகின்றனர்.

இத்தனையும் இங்கு கூறப்பட்டதற்குக் காரணம் நீதிமன்றங்களும் நீதியரசர்களும் தம்முன் வரும் வழக்குகளை அணுகும் முறை - வெறும் சட்டங்களின் இரக்கமற்ற சிட்டகங்களைத் தாண்டி கருணையும் இயற்கை நீதியும் கலந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான்.

சட்டங்களையம் வழக்குகளையும் அரசியல் பழிவாங்கும் கருவிகளாகப் பயன்படுத்தும் போக்கு இந்தியாவில் சில காலமாகப் பெருகி வருகின்றது. கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்ததும் அறிஞர்கள் அமைதி காத்தனர்; கலையுலகம் அமைதி காத்தது; மிகுந்த வேகத்தோடு கருத்துச் சொன்னவர்கள் அரசியல் தலைவர்கள்தான். இவ்வளவு ஆத்திரப்பட்டுக் கருத்துரை நல்கியதற்குக் காரணம் மெய்யாகவே ஊழல் எதிர்ப்பு அக்கறையா? அல்லது நீதியை நிலைநாட்டும் தீவிரமா? அல்லது அரசியல் களம் நமக்குச் சாதகமாக மாறி வருகிறது என்கிற கட்டற்ற உற்சாகமா?

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் சில அடிப்படை உண்மைகள் இருக்கலாம். அதிகாரம் சொத்துக்களை அதிகரிக்க உதவியிருக்கலாம். ஆனால் செருப்புகளையும், சேலைகளையும் கூடக் கடைபரப்பி வைத்து, ஆட்சி அதிகாரத்தால் சாட்சிகளை உருவாக்கி, குற்றவியல் வல்லுநர்களைக் குவித்து சதி வலைகளைச் சமைத்து - சிறிய அளவு தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை மலையளவு பெருக்கி உருவாக்கப்பட்ட வழக்கு இது என்பதைச் சின்னக் குழந்தை கூடச் சொல்லி விடும்.

நம்முடைய மாநிலத்தில் அப்பழுக்கற்ற முதல்வர்களாக அடையாளம் காட்ட வேண்டுமானால் ஓமந்தூராரைச் சொல்லலாம்; குமாரசாமி ராஜாவைக் கூறலாம்; ராஜாஜியையும் காமராஜரையும் பேசலாம்; குடியிருந்த வீட்டில் அரசு மேசை நாற்காலிகள் கூடக் கொண்டு வரப்பட வேண்டாம் என்று மறுத்த மனிதர் அண்ணாவை எண்ணிப் பார்க்கலாம். அவர்கள் வேறு யுகத்துப் பிறவிகள்.

பொதுவுடைமை இயக்கத் தலைவர்களையும், சில தியாகச் செம்மல்களையும் தவிர, மற்றவர்களில் யார் ஊழல் எதிலும் எனக்குத் தொடர்பில்லை; பணம் என் அரசியலைத் தீர்மானிக்காது என்று மார்தட்டிக் கூற வல்லவர்கள்? நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் என்று சராசரித் தமிழன் கேட்கமாட்டானா?

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு வெற்றிடத்தை இந்த வழக்கின் தீர்ப்பு உருவாக்கி இருக்கிறது. முந்தைய மத்திய அரசின் காலத்தில் உப்புக்கும் புளிக்குமாக அவர்களிடம் சிறையிலிருக்கும் (முன்னாள்) முதல்வர் போரிட வேண்டியிருந்தது. மின்சாரப் பாதைகளைச் செப்பனிட்டு வடக்கேயிருந்து மின்சாரம் கொண்டு வரும் இன்றியமையாப் பணியில் கூட இடையூறுகள் விளைவிக்கப்பட்டன. விளங்காத காரணங்களால் நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்ன- மறுக்கப்பட்டன. ஏழைகளின் அடுப்பெரிக்கும் மண்ணெண்ணெய் கூட மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டது.

காவிரி நீர்ப் பிரச்னை, முல்லைப் பெரியாறு சிக்கல் என மேலும் மேலும் முடிச்சுகள் போடப்பட்டன. இலங்கைத் தமிழன் ரத்தத்திலும் கண்ணீரிலும் ஊறித் தொலைந்தான். இத்தகைய இக்கட்டான தருணத்தில் தமிழகத்தில் போராளித் தன்மைமிக்க ஒரு தலைமை தேவைப்பட்டது. மக்கள் சிறையிலிருக்கும் (முன்னாள்) முதல்வரைத் தெரிவு செய்தனர்.

அந்தத் தலைமையின் ஆளுமை மத்திய அரசை மட்டுமல்லாது, கர்நாடக, கேரள அரசுகளையும் தமிழகப் பிரச்னைகளில் நல்ல தீர்வு காண நெருக்கியது. உச்சநீதிமன்றத்தில் நியாயமான முடிவைப் பெறவும் காரணமானது.

தேர்தல் களத்தில் அசைக்க முடியாத வெற்றிகளை அடுக்கடுக்காகப் பெற்றதால் தமிழக அரசியலில் எல்லா அணிகளும் ஒன்று சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாத அவலத்தைச் சந்தித்தன. இந்த நிலையில் ராஜபட்சேவும் குதூகலிக்கும் வண்ணம் கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்ததும், நம் அரசியல் தலைவர்கள் சூதில் பஞ்சாலியை வென்றபோது, சகுனியை அரவணைத்துக் கொண்ட துரியோதனன் போல,

"அன்று நகைத்தாளடா - என் மாமனே

அவளை என் ஆளாக்கினாய்

என்றும் மறவேனடா - உயிர் மாமனே

என்ன கைம்மாறு செய்வேன்?' - பாரதி

என்று ஆர்த்து முழங்கத் தலைப்பட்டிருப்பது மிகுந்த தலைகுனிவாக இருக்கிறது.

பணத்தால் தேர்தலில் வென்றுவிட்டதாக ஒரு பஞ்சாங்கப் பழங்கதையைப் பணம் கொடுத்தும் வெற்றி பெறாதவர்கள் சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள். "திருமங்கலம்' கோட்பாட்டைத் தேர்தலில் உருவாக்கியவர்களே இப்படிச் சொல்லிச் சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

கர்நாடக முதலமைச்சர் "நாங்கள் ஒன்றும் செய்யவில்லை; எல்லாம் நீதிமன்றத்தின் சுதந்தரமான தீர்ப்பு' என்கிறார். இதைக் கேட்கிறபோது "எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்ற கதை ஞாபகம் வராமல் போகாது. கர்நாடகத்துக்கு மட்டுமல்ல அண்டை மாநிலங்களுக்கும் நம் அரசியல் இயக்கங்களைப் போலவே இந்தத் தீர்ப்பின் முடிவில் அக்கறையும் ஆர்வமும் இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

மேல்முறையீடுகள் இருக்கின்றன. அவற்றில் வெற்றி கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால் ஒன்று மட்டும் சராசரித் தமிழனின் உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும்.

அறுபத்தாறு கோடி ரூபாய் அளவுக்கு மீறிச் சம்பாதித்தார்கள் என்ற குற்றம் சாட்டி, நூறு கோடி ரூபாய் அபராதம், நான்கு ஆண்டு சிறை, ஆறாண்டு தேர்தல் தடை என்ற கொடூரமான தீர்ப்பை - ஒரு அரசியல் தலைவரின் எதிர்கால அழித்தொழிப்பை - நல்ல உள்ளங்கள் நிச்சயமாக ஏற்காது.

ஊழல் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தண்டனை, டிராட்ஸ்கியின் படுகொலை போல் அரசியல் பழிவாங்கலாகத் தாழ்ந்து போகலாகாது. இந்தத் தீர்ப்பின் நெடிய வரலாற்றுப் பின்புலத்தில் அரசியல் நிர்ப்பந்தங்கள் இல்லையென்று சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே இருக்கும்.

Thursday, September 25, 2014

கேன்சர் விளக்கம் ---- தெரிந்துகொள்வோம்

பேரைச் சொன்னாலே நமக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய், புற்றுநோய் தான். இந்நோயின் வகைகளை வரிசைப்படுத்திச் சொன்னால் வாய் வலிக்கக் கூடிய அளவுக்கு இதன் பட்டியல் நீளமானது. இந்நோயை இரண்டு விதமாகப் பார்க்கலாம்... 1. புற்றுநோய் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்... 2. புற்றுநோய் வந்துவிட்டால் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள்... உலக அளவில், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன? அதற்கு செய்ய வேண்டியது என்ன? என்னென்ன உணவுப்பொருட்களில் வழக்கமான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் தவிர, புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. புற்றுநோய் வந்துவிட்டால் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள்: இந்தியாவில் புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்காக செலவழித்து 6 லட்சம் முதல் 8 லட்சம் பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம் உடைய குடும்பத்தினர் தங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை சர்க்கரை நோய்க்கு செலவழிக்கின்றனர். இத்துடன் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர் அக்குடும்பத்தில் இருந்தால் செலவு எங்கோ போய் நிற்கிறது. அதனால், புற்றுநோய் வருமுன் காப்பதே சிறப்பாகும். இதற்கு ஒரே வழி புற்றுநோய் வரக்கூடிய வழிகளை எல்லாம் அடைப்பதுதான். இது மிக மிகச் சுலபமானதும் சாத்தியமானதும் ஆகும். பன், பிஸ்கட், கேக் வாரத்துக்கு இரண்டு மூன்று முறை சாப்பிடும் பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதுவே, வாரம் மூன்று முறைக்கு மேல் சாப்பிடும் பெண்களுக்குக் கட்டிகள் உருவாகும் வாய்ப்பு இன்னும் அதிகமாம். அதிகப்படியான இனிப்பு, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து, என்ட்ரோ மெட்ரியத்தில், செல்களின் அபரிதமான வளர்ச்சியைத் தூண்டி விடுகிறது. வாரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கார்பனேட்டட் பானங்களை அருந்துபவர்களுக்குக் கணையப் புற்றுநோய் வாய்ப்பு அதிகம் என்கின்றனர். தினசரி சுமார் 2.5 லிட்டர் தண்ணீர் குடித்தால், சிறுநீர்ப் பையில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தவிர்க்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் தினசரி, பாட்டில் குளிர்பானம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள அதிகளவு சர்க்கரை காரணமாக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். பழச்சாறு எடுத்து சர்க்கரை கலக்காமல் அதன் இயற்கைச் சுவையில் அருந்துவதும், அப்படியே பழமாகச் சாப்பிடுவதும் நல்லது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சென்னை அடையார், கேன்சர் இன்ஸ்டிடியூட் தலைவரும், பிரபல புற்றுநோய் மருத்துவருமான டாக்டர் வி. சாந்தா அவர்கள் சில வருடங்களுக்கு முன் சொன்னது: ``அதிகப்படியான உப்பின் பயன்பாடு புற்றுநோயைத் தோற்றுவிக்கும். அதனால், அதிகப்படியான உப்பின் பயன்பாட்டையும், கருவாடு, உப்பில் காய வைத்த ஊறுகாய்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்'' என்று கூறியுள்ளார். புற்றுநோயை எதிர்க்கும் உணவுப்பொருட்கள்: காளானில், எர்கோதியோனீன் - ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், லென்ட்டினான் ஃபைட்டோ கெமிக்கல், செலீனியம், வைட்டமின் `டி' வைட்டமின் `சி', நார்ச்சத்து உள்ளன. தக்காளி, பரங்கிக்காய், கேரட் போன்றவற்றில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகளை விட, அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் வெள்ளைப்பட்டன் காளானில் உள்ளன. வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள், இலவங்கப்பட்டை போன்ற இதர ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகளுடன் சமைக்கும்போது காளானின் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் சக்தி அதிகரிக்கிறதாம்.

புற்று நோய்க்கு எளிய மருந்து

வெறும் நூறு ரூபாயில் (Rs.100) புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ! புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். . இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் . சோற்று கற்றாழை 400 கிராம் சுத்தமான தேன் 500 கிராம் whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக) தயாரிப்பு முறை சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்.தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது மருந்தை உட்கொள்ளும் விதம். இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது . உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது. ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !? நாம மனசு வைச்ச எல்லாம் முடியும்.

Monday, September 15, 2014

கடவுள் என்பது யார்?

கடவுள் யாரோ ஒருவராக இல்லை. ஏனென்றால் அவர் ஒரு நபர் அல்லர். கடவுள் என்பது எல்லாம் அடங்கிய ஒரு முழுமையான உயிர்த்தன்மை.(EXISTENCE). அந்தச் சொல், யாரையும் குறிப்பிடாது. கடவுள் என்பது 'எல்லாம்' (ALLNESS) என்று மட்டுமே கூறமுடியும். நான் கடவுள் --நீங்கள் கடவுள் -- ஏன் எல்லாருமே கடவுள்தான். சரியாகச் சொன்னால், இந்தக் கடவுள் என்ற வார்த்தையை உபயோகிப்பதே சரியில்லை. எங்கும் கடவுள்தன்மை (GODLINESS)தான் இருக்கிறது. கடவுள் என்ற எதுவும் தனியாக இல்லை. ஏன், கடவுளர்களே இல்லை. 'உண்மையை' சரியாகக் குறிப்பிட, ' கடவுள்தன்மை' என்ற வார்த்தைதான் சரியானது. 'கடவுள்' என்ற வார்த்தை இல்லை. நீங்கள் இந்த 'கடவுள்' என்ற வார்த்தையை உபயோகிக்கும்பொழுது, அதிலிருந்து பல விஷயங்கள் வெளியே வருகின்றன. முதலில் கடவுள் என்பது ஒரு தனி நபராகிறது. ஆனால் கடவுள் என்பது ஒரு தனி மனிதன் இல்லை. அது ஒரு சுட்டிக்காட்ட முடியாத உயிரியக்கம். நீங்கள் கடவுள் என்று குறிப்பிடும்பொழுது, அந்த வார்த்தை பெரும்பாலும் ஆணைக் குறிக்கிறது--ஆண் ஆதிக்கத்தைக் குறிக்கிறது. இது மிகவு‌ம் அருவருப்பானது. 'கடவுள்' என்பது 'அவனோ' அல்லது 'அவளோ' அல்லள். அப்படி ஆண் அல்லது பெண் பிரிவில் அதை அழைக்க விரும்பினால், அதைப் பெண் என்றே குறிப்பிடுங்கள்--ஏனென்றால், பெண்ணில், ஆணும் அடக்கம். ஆனால், ஆணில், பெண் அடக்கம் இல்லை. ஆகவே, பெண் என்று அழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். பெண் என்ற சொல், ஆண் என்ற சொல்லைவிட மிகப் பெரியது. பெண்ணின் மூலமாகவே, ஆண் பிறக்கிறான். ஆகவே, ஒரு பெண்ணால், ஆணைத் தன்னுள் அடக்கிக் கொள்ள முடியும். ஆனால், ஒரு பெண்ணை தன்னுள் வைத்துக் கொள்ள ஓர் ஆணால் முடியாது. இது இயற்கை நியதி. ஆணுக்குள் கர்ப்பப்பை என்று எதுவும் கிடையாது. ஆனால், இரண்டுமே சரியில்லை. கடவுள் ஆணும் அல்ல. பெண்ணும் அல்ல. அவர் ஒரு நபரே கிடையாது. அப்படியென்றால், கடவுள் என்பது என்ன? தயவுசெய்து 'கடவுள் என்பது யார்?' என்று கேட்காதீர்கள். 'கடவுள் என்பது என்ன?' என்று கேளுங்கள். கடவுள் என்பது வாழ்வு, கடவுள் என்பது அன்பு, கடவுள் என்பது ஒளி...அது ஒரு பேரியக்க பிரபஞ்ச அனுபவம். கடவுள் என்ற ஒரு பொருளை அல்லது நபரை, நீங்கள் ஒருபோதும் சந்திக்க முடியாது. நீங்கள் உங்களுடைய உள் உணர்வாக, கடவுள்தன்மையை அனுபவமாக அறிந்து கொள்ளலாம். ஏதோ ஒன்று உங்களின் உள்ளே மலர்கிறது.. ..அந்த மலரைக்கூட உங்களால் பார்க்க முடியாது. ஆனால், அதன் நறுமணத்தை நீங்கள் தீர்க்கமாக உணரலாம். ஆகவே, கடவுள் என்பது நறுமணம்தான். மலர் அல்ல. கடவுள் எங்கே இருக்கிறார், அவர் யார்? என்று என்னால் குறிப்பிட்டு சுட்டிக் காட்ட முடியாது. நான் அந்த நறுமணத்தை உணர்ந்த அனுபவத்தை வேண்டுமானால், என்னால் ஓரளவு வெளிப்படுத்த முடியும். இந்தப் பிரபஞ்ச உயிரியக்கம் அனைத்திலும், கடவுள்தன்மை இரண்டறக் கலந்திருக்கிறது. எல்லாமே தெய்வீகம்தான்--இந்த மலர்கள், பறவைகள், பாறைகள், ஆறுகள். ...நீங்கள் கடவுளுக்காக, எந்தக் கோயிலையும், எந்த சர்ச்சையும் ஏற்படுத்தத் தேவையில்லை. இது மிகவும் முட்டாள்தனம். ஏனென்றால், கடவுள் எங்கும், எதிலும் இருக்கிறார். ஆகவே, யாருக்காக நீங்கள் கோயில்களையும், சர்ச்சுகளையும், மசூதிகளையும், ஏற்படுத்துகிறார்கள்? நீங்கள் பிரார்த்தனை செய்ய விரும்பினால், எங்கே வேண்டுமானாலும் பிராத்தனை செய்யலாம். நீங்கள் எங்கே குனிந்து வணங்கினாலும், அது கடவுளை நோக்கி, குனிந்து வணங்குவதாகிறது. ஏனென்றால், அங்கு அதைத்தவிர, வேறு எதுவும் இல்லை. ஓஷோ.

Thursday, September 11, 2014

மருந்தாகும் ஓமவல்லி ! கற்பூரவள்ளி என்றும் அழைக்கப்படும். வீட்டுத் தொட்டியில் வளர்க்க எட்டு மாதங்கள் ஆகும். இலை கசப்பு சுவையும் காரத்தன்மையும் கொண்டது. இதன் இலை மற்றும் தண்டுப்பகுதி இருமல், சளி, ஜலதோஷத்துக்கு முக்கியமான மருந்து. இதன் இலையைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சீதள இருமல் நோய் தீரும். இலைச் சாறை நெற்றியில் பத்து போட்டால், தலைவலி நீங்கும். குழந்தைகளின் அஜீரண வாந்தி நீக்கும். கண் அழற்சிக்கும் உகந்தது. மனக் கோளாறை சரிசெய்யும் மருந்திலும் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இலையைக்கொண்டு பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம்

Tuesday, September 9, 2014

மனைவி ராசியில் இருந்து எண்ணி வர கணவன் ராசி 6 , 8 இடங்களில் இருந்தால் அவர்கள் இருவர்க்கும் அடிக்கடி சண்டை வரும், நிம்மதி இருக்காது. இவ்வாறு அமைப்பு உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார கோவிலாக காஞ்சிபுரம் அருகில் உள்ள திருமால் ஈஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது கணவன் மனைவி சேர்ந்து சென்று வழிபட இருவருக்கும் ஒற்றுமை சந்தோஷ வாழ்வு அமையும் ஓம் திருமால் ஈஸ்வரரே போற்றி