Pages

Powered By Blogger

Thursday, December 22, 2011

ஜெயலலிதா ஒன்றும் தெரியாதவர் அல்ல


ஒரு மாநிலத்தை ஆளும் தகுதிபடைத்த ஜெயலலிதாவுக்கு தன வீட்டில் நடந்திருப்பது தெரியாமலிருக்காது -
  மற்றவர்கள்  சொல்லித்தான்  தெரியுக்கூடிய  நிலையில் அவ்வளவு சுயசிந்தனை அற்றவர் இல்லை அவர் -
 தான் நம்பிய கூட்டத்தின் சதிவலை தன்னையே வளைக்கும் நிலைக்கு தான் வந்துவிட்டதை அவர் எப்போதோ உணர்ந்திருப்பார் -. இப்போது மீடியாக்கள் மூலம் வரும் செய்திகளை பார்த்தால்  ஆட்சி அதிகாரத்திற்கு முன் அவர் நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிருக்கே ஆபத்து வந்திருக்கும் கொஞ்சம் எண்ணிப்பார்த்தால் இப்போது கூடஅதிகாரம் கையில் இருந்தும் அந்த விஷத் சிலந்தி வலைகளை அழிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும்

Tuesday, December 13, 2011

கடவுள்' இருப்பது உண்மை தான்!!

  • கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

    இந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (mass) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது
  •  பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைத்துள்ள Large Hadron Collider என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை தொடங்கியது. (அதற்கு ஓராண்டுக்கு முன்பே சோதனை தொடங்கியது. ஆனால், ஆரம்பத்திலேயே அதன் குளிரூட்டு்ம் கருவிகளில் பிரச்சனை வந்ததால், அதை சரி செய்து சோதனையை ஆரம்பிக்க ஓராண்டு ஆகிவிட்டது).

    கிட்டத்தட்ட 400 டிரி்ல்லியன் புரோட்டான்களை எதிரெதிர் திசையில் அதிபயங்கர வேகத்தில் மோதவிட்டு சோதனைகள் நடந்தன. அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்த சோதனைகளை நடத்தினர்.

    இருவருக்கும் கிடைத்துள்ள ஒரே ரிசல்ட்.... 'Higgs Boson' இருக்கிறது என்பது தான்.
  • அது என்ன 'ஹிக்ஸ் போஸன்'?:

    ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் (சப்-அடாமிக் பார்ட்டிகிள்கள்) ஆனது. ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால், உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது.

    இதனால், புரோட்டானில் இன்னும் ஏதோ ஒரு 'வெயிட்டான' சமாச்சாரமும் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அது என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் உதித்த விஷயம் தான் 'ஹிக்ஸ் போஸன்'.

    இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த 'ஹிக்ஸ் போஸன்' தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்று பெயரிடப்பட்டது.

    இதையடுத்து இந்தத் துகளைத் தேடி பயணத்தை ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள். டிரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அது சிதறும். கூடவே, 'ஹிக்ஸ் போஸன்' துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில் தான் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்ற அதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.

    இங்கு அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் 'ஹிக்ஸ் போஸன்' என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் 'ஹிக்ஸ் போஸன்' தான்.

    இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

    'ஹிக்ஸ் போஸனிடம்' ஸாரி.. கடவுளிடம் பாரத்தை போட்டு விட்டு காத்திருப்போம்..!

Friday, December 9, 2011

மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர்சத்துக்களையும் கனிமங்களையும்
தன்னுள்ளே கொண்டுள்ளது. சுண்ணாம்புச்சத்து அதிக அளவு உள்ளதால் இப்பழம் பல
நோய்களை கண்டிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இதில் "ப்ரக் டோஸ், க்ளூக் கோஸ்,
சக்ரோஸ்' ஆகிய மூன்று வித சர்க் கரைகள் உள்ளன. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக
அபூர்வமானது. உடலுக்கு அவசிய தேவையான நார்ச்சத்து, புரதச் சத்து
போன்ற முக் கியமான சத்துக்களையும் வாழைப்பழம் தன்னுள்ளே கொண்டுள்ளது. மேலும்,
வைட்ட மின்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம் ஆகிய சத்துக்களும் இருப் பதால்,
உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே கிடைக்கிறது.


வாழைப்பழத்தின் வகைகள்

ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில்
70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும்.
செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக்
குறைக்கும். மலைவாழை சோகையை நீக்கும். பேயன் வாழை குடற்புண் தீர்க்கும். நவரை
வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

சரும நோய் நிவாரணி

வாழைப்பழம் உணவை எளிதில் ஜீரணமாக்கும் ஆற்றல் உள்ளது. பித்தத்தை நீக்கும்.
உடலுக்கு வலுவும் எடையை அதிகரிக்கும் ஆற்றலும் கொண்டது. ரத்த ஓட்டத்தை விருத்தி
செய்யும். மலச்சிக்கல் இருந்தால் போக்கிவிடும்.. ஒழுங்கற்ற மாதவிலக்கு
உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் ஒழுங்கு ஏற்படும்.
ஜீரணத் தொடர்பான நோய்களை கண்டிப்பதோடு, குடலில் புண் இருந்தால் ஆற்றும் தன்மை
உண்டு. சரும நோய்களுக்கு இது தகுந்த நிவாரணி
 சோர்வை நீக்கும்

கடும் வேலையிலும் சோர்வு வராமல் நீக்குவது வாழைப் பழம் தான். சாப்பிட்ட பின்
சுறு சுறுப்பு தானாக வந்து விடும். அதன் பின், மீண்டும் சில மணி நேரம் வேலை
செய்யலாம். வாழைப்பழத்தில் உள்ள, "ட்ரைப் டோபன், செரடோனின்' ஆகிய ரசாயன
சத்துக்கள் தான் இதற்கு காரணம்.

ரத்த அழுத்தம், பக்கவாதம்

பக்க வாதங்கள் வராமல் தடுக்க வாழைப் பழம் பெரிதும் உதவுகிறது. மற்றவர்களை விட,
50 சதவீதம் அளவுக்கு பக்கவாதம் வராமல் தடுப் பதில் வாழைப் பழம் உதவுகிறது.
வாழைப் பழத்தில், "ஷுகர்' அளவு குறைவு; பொட்டாஷியம் சத்து அதிகம். அதனால், ரத்த
அழுத் தத்தை அறவே தடுத்து விடும். வாழைப்பழத் தில், "வைட்டமின் பி6' உள்ளது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது இதுதான். வாழைப்
பழத்தில், "ஆன்டாசிட்' ரசாயனம் உள்ளதால், உணவு சாப்பிட்ட பின் சிலருக்கு
ஏற்படும் நெஞ்செரிச்சலை சுலபமாக போக்கி விடுகிறது. வாழைப்பழத்தில்,
இரும்புச்சத்து உள் ளது. ரத்தத்தில் ஹீமோக் ளோபின் சத்து இல்லாததால் தான் ரத்த
சோகை ஏற்படுகிறது. ரத்த சோகை உள்ள வர்கள், வாழைப்பழம் சாப் பிட்டு வந்தால்,
ரத்த சோகை போயே போச்சு.
 மூளை சுறுசுறுப்பு

காலை உணவிலேயே ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது, மூளைக்கு சுறு சுறுப்பை தரும்.
மதிய உணவு, மாலை வேளை நொறுக்குத் தீனி, இரவு சாப்பாடு ஆகிய வற்றுடன் வாழைப்பழம்
சாப்பிட்டால் மூளைக்கு பலம் அதிகரிக்கும்..
கனிந்தும் கனியாமல் அரை குறையாக இருக்கும் வாழைப் பழத்தை பாலில் வேக வைத்து
கூழ் போல் ஆக்கி, அதனுடன் பாதாம் பருப்பு, பேரீச்சம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக
நறுக்கி போடவும். இவற்றுடன் தேனும் கலந்து வைத்துக் கொள்ளவும். இதை தினமும்
காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, கை, கால் நடுக்கம்
ஆகியவை நீங்கும். மூளையின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.

வறட்டு இருமல் போக்கும்

உடம்பில் கை, கால் எரிச்சல் அல்லது கண் எரிச்சல் அல் லது உடலில் எரிச்சல்
என்று இருந்தால் கவலை வெண்டாம். நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து,
காலையில் சாப்பிடுங்கள். சிறிது நேரத்தில் குணமாகும்.. தீராத வறட்டு இருமல்
போன்ற பிரச்சினைகளுக்கு கனிந்த வாழைப் பழத்தை சாப்பிட்டால் குணமாகும்.

உடலில் சிலருக்கு சிலந்தி போன்ற கட்டிகள் ஏற்படும். இந்த கட்டிகள் மீது
வாழைப்பழத்தை நன்றாகக் குழைத்து பூசி வந்தால் கட்டிகள் சீக்கிரமே பழுத்து சீழ்
வெளியாகி குணமாகும். கரப்பான் நோய்க்கு வாழைப்பழத் தோலை நெருப்பினில் எரித்து
சாம்பலாக்கி, அதை கடுகு எண்ணை கலந்து கரப்பான் மீது பூசினால் குணமாகும்.


வயிற்றுப்புண், மூலம்நோய் கட்டுப்படும்

பல பழங் களில், அமிலச் சத்து இருக்கிறது. அதனால், வயிற்றுப் புண் (அல்சர்)
உள்ளவர்கள் சாப்பிட கூடாது. ஆனால், வாழைப் பழத்தில் அமிலச் சத்து இல்லவே இல்லை.
அத னால், தாராளமாக சாப்பிடலாம். வயிற்றில் வாழைப் பழம் போனதும், வயிற் றில்
உள்ள அமிலச் சத்தை குறைக் கிறது. அதனால், "அல்சர்' உள்ள வர்களுக்கு கை
கொடுக்கிறது வாழைப்பழம்.
மூலம் மற்றும் பவுத்திரம் ஆகிய சிக்கல்களால் சிக்கித் தவிப்போர், நன்றாக
பழுத்த வாழைப் பழத்தை பாலில் போட்டு வேகவைத்து, மசித்து, காலை, மாலை சாப்பிட்டு
வந்தால், மேற்கண்ட பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும். திராட்சை சாறு, தேன்,
வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் கட்டுப்படும்.

வாழை பிஞ்சுகளை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, காலை, மாலை சாப்பிட்டு
வந்தால் குடல்புண், இரைப்பை புண் மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகிய பிரச்சினைகள்
நீங் கும். அதேபோல், வாழைப்பழத்தை தேனில் ஊறவைத்து, அதனுடன் 2 பேரீச்சம் பழத்தை
சேர்த்து, பாலுடன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் ஆறிவிடும்.

 எப்பொழுது சாப்பிடலாம் ?

இப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். மயக்கமும்,
மூச்சு திணறலும், உண்டாகும். அதனால் உணவு அருந்திய பிறகே அளவாக சாப்பிட
வேண்டும். உணவு சாப்பிட பிடிக்காது போய்விடும்.
சிலர் இரவில் படுக்கும் முன்பு பாலும் பழமும் சாப்பிடுவதை வழக்கமாக
கொண்டுள்ளனர். அதில் முதலில் பழத்தையும், பின்பு பாலையும் அருந்து கின்றனர்.
அது முறையல்ல. முதலில் பாலையும், பின்பு பழத்தையும் சாப்பிடுவதுதான் சரியானது.
உடல் நலத்திற்கு ஏற்றதும் கூட.

100 கிராம் வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

நீர் 61.4%, மாவுச்சத்து 36.4.%, சுண்ணாம்புச்சத்து 0.01%, மை.கிரிபோபிளேவின்
0.08 மி.கி., வைட்டமின் 'சி' 7 மி.கி., புரோட்டின் 1.3%, கொழுப்பு 0..2%,
இரும்பு 0.04%, தயமின் 0.05 மி.கி., நியாசின் 0.5 மி.கி



Thursday, December 8, 2011

சினிமா விமர்சனம்: பாலை


உலகம் முழுவதும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை, கடந்த காலப் பதிவுகளை உடனுக்குடன் பதிவு செய்வதில் ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள் என்றாலும் அவர்களுக்கு நாமும் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது ம.செந்தமிழனின் "பாலை' திரைப்படம். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி தமிழினத்தின் வரலாற்றைப் பேசும் இந்தப் படத்தில் உட்கருவாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சொல்லியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். காட்சிக்கு காட்சி விரியும் பழந்தமிழர்களின் பண்பாடும் வாழ்வியலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. உலகின் பெரும்பாலான பகுதிகளில் விலங்குகளை மனிதர்கள்   வேட்டையாடிக்கொண்டும் நர மாமிசம் சாப்பிட்டுக்கொண்டும் இருந்த கால கட்டத்தில் தமிழர்கள் வீடு கட்டி, அடுப்பு மூட்டி, சமைத்தும், ஆடு, மாடுகளை மேய்த்தும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வந்தவர்கள் என்ற அறிமுகத்தோடு படம் தொடங்கும்போதே பார்வையாளர்களுக்கு பரவசம் தொற்றிக்கொள்கிறது. வடக்கிலிருந்து வரும் வந்தேறிகள், தமிழர்களின் வளமான ஆயக்குடியைக் கைப்பற்றுவதோடு அவர்களின் பெரும் பகுதியினரை அழித்தொழிக்கவும் செய்கின்றனர். எஞ்சியிருப்பவர்கள் முல்லைக்குடி என்றொரு சிற்றூரைக் கட்டமைத்து வாழத் தொடங்குகின்றனர். கால மாற்றத்தில் அங்கே வரவிருக்கும் வறட்சியைச் சமாளிக்க முல்லைக்குடி தமிழர்கள் என்ன செய்தார்கள்? தங்களுக்குச் சொந்தமான வளமான ஆயக்குடியை மீட்டார்களா என்பதுதான் கதை. வளன், காயாம்பூ, விருத்திரன், முதுவன், அத்தி, அகி, கூத்தன், பாவை, முல்லை என கதாபாத்திரங்களின் பெயர்களே இது ஒரு நல்ல தமிழ்ப் படைப்பு என்பதற்குச் சான்று. மழைக்குறி பார்த்தல், பரிகட்டையில் மீன் பிடித்தல், ஏறு தழுவுதல், ஆநிரை கவர்தல், மீன் வேட்டை, உடன்போக்கு, எளிமையான திருமணச் சடங்கு, நீர்க்கடிகாரம், ஆமைகள் மூலம் காலநிலை மாற்றத்தை உணருதல், கவன் கல் எறிதல் போன்ற காட்சிகள் - தமிழர்கள் தொன்றுதொட்டு கடைப்பிடித்த அறிவார்ந்த விஷயங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன. முல்லைக்குடி தலைவர் விருத்திரன் - முதுவன் இடையே நடக்கும் போர் தொடர்பான வசனங்களில் ஈழத்தின் அவலம் அங்குலம் அங்குலமாக அலசப்பட்டிருக்கிறது. விருத்திரன் சக வீரர்களிடம் சொல்லும் சிங்கம், புலி விலங்குகளுக்கு இடையே உள்ள வித்தியாசம், சம காலத் தமிழர்களின் அரசியலை அனலாகக் கக்குகிறது. "தலைவர் எங்கே எங்கேன்னு என்னைத் தேடாதே; எதிரி எங்கே எதிரி எங்கேன்னு அவனைத் தேடு' என்கிற தலைவரின் வசனங்கள் நடந்து முடிந்த அவலத்துக்கு வடிகால் தேடுகின்றன. முதுவனாக வரும் பேராசிரியர் வை.நடராசன், விருந்தினராக வரும் இளையராஜா, வளனாக வரும் சுனில், காயாம்பூவாக வரும் ஷம்மு என எல்லோரும் அவரவர் கதாபாத்திரங்களின் கனம் உணர்ந்து மனமுவந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வேத் ஷங்கர் சுகவனத்தின் பாடலிசையும் பின்னணி இசையும் படத்துக்குப் பெரிய பலம். சாதாரண 5டி கேனான் கேமராவின் மூலம் காட்சிகளை மிக அற்புதமாகவும் அழகியல்ரீதியாகவும் பதிவு செய்திருக்கும் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு பிரமாண்ட படங்களுக்கு சவால் விட்டிருக்கிறது. இயக்குநர் செந்தமிழன் எழுதிய பாடல் வரிகள் சங்க இலக்கியப் பாடல்களைப் படித்த பரவசத்தை ஏற்படுத்துகின்றன. சில இடங்களில் கதாபாத்திரங்களின் முகங்களைச் சரியாக அடையாளம் காண முடியாத இருட்டான காட்சிகள், போர்க்களத்தில் இரு பிரிவினருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடை, ஆங்காங்கே இடம்பெறும் ஆவணப் பட பாணி என சிறு சிறு குறைகள் இருந்தாலும் - இதர விஷயங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு ஜனரஞ்சகமான படமாக "பாலை'யைக் கண்முன் நிறுத்துகின்றன. இறுதிப் போரில் தலைவருக்கு என்ன ஆனது என்பதைச் சொல்லாமல் தவிர்த்து "நாம் வாழும் ஒவ்வோர் அடி மண்ணையும் மீட்க நம் முன்னோர்கள் போராடி இருக்கிறார்கள்' என்ற செய்தியுடன் படம் நிறைவடைகிறது.  அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் செய்ய வேண்டிய, செய்ய மறந்த ஒரு வரலாற்றுப் பதிவை, குறைந்த பொருள்செலவில் தன் முதல் படத்திலேயே செய்துள்ளதன் மூலம் சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் செந்தமிழன்.  "பாலை' - ஆண்டுகள் பன்னிரெண்டுக்கு ஒரு முறை அபூர்வமாகப் பூக்கும் குறிஞ்சி மலர்! குறைந்த பட்ஜெட்டில் தரமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தைத் திரையிட அதிக திரையரங்குகள் கிடைக்காதது பரிதாபம். பெரிய பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து, அதை ரிலீஸ் செய்து, தொடர்ந்து கையைச் சுட்டுக்கொள்ளும் தயாரிப்பு நிறுவனங்கள் இதுபோன்ற தரமான, எளிய பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிட்டால் லாபத்தோடு நல்ல பெயரையும் அடையலாம்.÷சங்கத் தமிழனை இன்றைய தமிழனுக்கு நினைவூட்ட வேண்டும் என்கிற லட்சிய வெறியுடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தைத் தமிழக முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் மட்டுமல்ல, தமிழக அரசியலில் வலம் வரும் தலைவர்கள் அனைவரும் கட்டாயம் பார்த்தாக வேண்டும். அவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனும்தான்!

 நன்றி : தினமணி (09-12-2011)


World record: Sehwag highest run getter in ODI cricket | 219 ரன்கள் எடுத்து ஷேவாக் உலக சாதனை-400 ரன் எடுத்து இந்தியா சாதனை! - Thatscricket Tamil

World record: Sehwag highest run getter in ODI cricket | 219 ரன்கள் எடுத்து ஷேவாக் உலக சாதனை-400 ரன் எடுத்து இந்தியா சாதனை! - Thatscricket Tamil